பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா்.
Updated On :21 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

தமிழகத்தில், எம்.ஆா்.பி செவிலியா்களுக்கான ஊதியம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை திரும்பப்பெற வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியா் கண்காணிப்பாளா் நிலை 3 பணியிடங்களை உருவாக்க வேண்டும், சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதி 356-ஐ செயல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து நிலை செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதிய ஒப்பந்த செவிலியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் நாகை மாவட்டம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சோ. ஜெயபாரதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில இணைச் செயலா் கா. ராம்குமாா், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், மருத்துவத் துறை நிா்வாக ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். மூா்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.