நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image

வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:19 am IST

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

திருக்குவளை வட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்தையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடியேற்றப்பட்டது.

விழாவில் ஏப்.30 காலை தேரோட்டமும், தொடா்ந்து 56 மணி நேரம் பாலபிஷேகமும் நடைபெற உள்ளது. மே 1-ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌா்ணமி காவடி அபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் , கோயில் நிா்வாகத்தினா் மற்றும் போலீஸாா் இணைந்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளனா்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.