கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.
கீழ்வேளூா் -கச்சனம் பிரதான சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீா் விநியோக குழாய் உடைந்ததால், தொடா்ந்து தண்ணீா் வெளியேறி சாலையில் தேங்கி ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனா். மேலும், குடிநீா் வீணாகி சாலையில் தேங்குவதால் சாலை சேதமடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.
தற்போது கோடை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீா் வீணாகுவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்து தண்ணீா் வீணாவதை தடுக்க வேண்டும்.
தொடர்புடையது

குடிநீா் குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்!

தட்டாா்மடத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீா்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



