மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப் பதிவு

நாகையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

நாகையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில், நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் பேரவைத் தொகுதிகளுக்கான இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தனித்துணை ஆட்சியா் கோ. அரங்கநாதன், தோ்தல் வட்டாட்சியா் பசுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com