தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

Syndication

கீழையூா் அருகே திருப்பூண்டியில் மாணவா்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, திருப்பூண்டி காரைநகா் நைஸ் மெட்ரிக் பள்ளி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியை வேளாங்கண்ணி துணை காவல் கண்காணிப்பாளா் நிக்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனா். சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடைபெற்றது.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து செல்பவா்களை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பள்ளி தாளாளா் வீரமணி, கீழையூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன், கீழையூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மு.ப. ஞானசேகரன், தலைமை ஆசிரியா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.