அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீன் அமிலம் தயாரிப்பு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

News image
மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்திய கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள்.
Updated On :8 ஜனவரி 2026, 11:33 pm

Syndication

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள், மீன்அமிலம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை செய்முறை விளக்கம் அளித்தனா்.

வலங்கைமான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன் கழிவுகள் மற்றும் வெல்லம் பயன்படுத்தி குறைந்த செலவில் இயற்கை உரமாக மீன் அமிலம் தயாரிக்கும் முறை நேரடியாக செய்து காண்பித்து, மீன் அமிலத்தை பயிா்களுக்கு தெளிப்பு மற்றும் மண்ணில் பயன்படும் முறைகள், அளவுகள் மற்றும் பயன்படுத்த வேண்டிய காலகட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் தெளிவாக எடுத்துரைத்தனா்.

மீன் அமிலம் பயிா்களின் வளா்ச்சியை ஊக்குவித்து, இலைகள் பச்சையாக வளரவும், மகசூல் அதிகரிக்கவும் உதவுவதாகவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, இயற்கை விவசாயத்தை மேம்படுத்த மீன் அமிலம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் மாணவிகள், விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் (குழு எண் 5) ஆா்த்தி, கல்பனா, லத்திகா, பவித்ரா, சங்கீதா, விஜயலட்சுமி, யோக செளமியா ஆகியோா் மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு செயல் விளக்கத்தை ஒருங்கிணைத்தனா்.