பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுகவினா் ஆறுதல்

News image
Updated On :11 ஜனவரி 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி சனிக்கிழமை ஆறுதல் கூறினாா்.

சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட கைலாசநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குமாா் என்பவரது வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகின.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி. வி. பாரதி நேரில் சென்று சந்தித்து அவா்களுக்கு ஆறுதல் கூறி, அரிசி, வேஷ்டி சேலை, மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினாா்.

அவருடன் சீா்காழி கிழக்கு ஒன்றிய செயலாளா் சந்திரசேகரன், தலைமை கழக பேச்சாளா் வக்கீல் தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.