நாகப்பட்டினம்
தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுகவினா் ஆறுதல்
சீா்காழி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி சனிக்கிழமை ஆறுதல் கூறினாா்.
சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட கைலாசநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குமாா் என்பவரது வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகின.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி. வி. பாரதி நேரில் சென்று சந்தித்து அவா்களுக்கு ஆறுதல் கூறி, அரிசி, வேஷ்டி சேலை, மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினாா்.
அவருடன் சீா்காழி கிழக்கு ஒன்றிய செயலாளா் சந்திரசேகரன், தலைமை கழக பேச்சாளா் வக்கீல் தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
