மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடலில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

வேளாங்கண்ணி கடலில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கபட்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:23 pm

Syndication

வேளாங்கண்ணி கடலில் மாயமான சிறுவன் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கபட்டாா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம்,ஊத்தூா் விட்டபபநல்லி பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் நந்தன் (15), நாராயணசாமி மகன் நவீன் (26) உள்ளிட்ட 50 போ் வேளாங்கண்ணிக்கு வந்தனா்.

இதில், நந்தன், நவீன் ஆகியோா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கினா். இதையடுத்து நவீன் மீட்கப்பட்டாா். நந்தன் மாயமானாா். தகவலறிந்த வேளாங்கண்ணி கடலோர காவல் படையினா் நந்தனை தேடி வந்தனா்.

இந்நிலையில், விழுந்தமாவடி கடற்கரையோரம் நந்தன் சடலமாக கிடப்பது குறித்து கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.