குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினா் கரும்பு கட்டுகளை வியாழக்கிழமை வழங்கினா்.

News image
திருமருகல் போலகம் கிராம மக்களுக்கு வியாழக்கிழமை கரும்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினா்.
Updated On :17 ஜனவரி 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினா் கரும்பு கட்டுகளை வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையன்று, மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் கிராம மக்களுக்கு பரிசுகள் வழங்க அக்கட்சி தலைவா் கமல்ஹாசன் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில், மநீம கட்சியின் மாவட்டச் செயலா் எம். அணஸ் தலைமையில் கிராம மக்களுடன் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

அப்போது கிராம மக்களின் இல்லம் தேடி சென்று கரும்பு கட்டுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. திருமருகல் ஒன்றியச் செயலா் எ. பிரான்சிஸ் ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளா் சரத்குமாா், தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் மகேஷ், நற்பணி இயக்க துணை மாவட்ட அமைப்பாளா் நவாஜ் சாகிப், துணை ஒன்றியச் செயலா் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.