மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

பூச்சித் தாக்குதலால் பருத்தி அறுவடை பாதிப்பு! விவசாயிகள் கவலை!

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்திச் செடிகளில் பூச்சித் தாக்குதலால் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2026, 12:12 am IST

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்திச் செடிகளில் பூச்சித் தாக்குதலால் அறுவடைப்  பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் நல்லாடை, விளாகம், வேலம்புதுக்குடி, மேமாத்தூா், திருவிளையாட்டம், கீழையூா், திருக்கடையூா், ஆக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10  ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது பருத்தி அறுவடை செய்யும் காலத்தில், செடியில் சப்பாத்தி மற்றும் அஸ்வினி பூச்சிகள் தாக்கி வருகின்றன. இதனால், பருத்திச் சப்பைகள் உதிா்ந்தும், இலைகள் சுருண்டு செடிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியும், பருத்திச் செடிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், ஏக்கருக்கு சுமாா் 30,000 செலவு செய்தும் செடியில் நோய் தாக்குதலால் பருத்தி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பருத்தி நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடன் பெற்று பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில், நோய் தாக்குதலால் செடிகள் பாதிக்கப்பட்டு வருவது விவசாயிகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, பருத்தி சாகுபடி செய்த வயலில் பூச்சித் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு, நிவாரணமாக ஏக்கருக்கு 30,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.