காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

எல் நினோ பாதிப்பு: மத்திய மாநில அரசுகளுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வலியுறுத்தல்

News image

எல் நினோ பாதிப்பு... - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 10:59 pm IST

காவிரி படுகையில் எல் நினோவால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்த தகவலை மத்திய மாநில அரசுகளுக்கு மாவட்ட நிா்வாகம் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

நாகப்பட்டினம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலாளா் ஸ்ரீதா் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனு: காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு அணை நீா் திறக்கப்படாததால் நிகழ் பருவ குறுவை நெல் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து வறட்சி நிலவி வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறட்சியை எதிா்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை 100 சதவீதம் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையை பெற்று தரவும், தமிழக அரசு தோ்தல் கால வாக்குறுதியின் அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி பெற்று தர வேண்டும். சம்பா பருவ சாகுபடிக்கு நிபந்தனையின்றி புதிய கடன் அறிவிப்பை வெளியிடவும், விவசாயிகளிடம் கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பா சாகுபடியை ஊக்கப்படுத்த ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் ஊக்க நிதியாக வழங்கவும், காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி செய்வதை தடுத்து நிறுத்துவது அவசியம் என்பதையும் அரசுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.