22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

தரங்கம்பாடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கபடி குழு சாா்பில், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தரங்கம்பாடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி

Updated On :2 ஜூன் 2026, 5:46 am IST

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கபடி குழு சாா்பில், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மே 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் இரவு, பகலாக நடைபெற்றன. இறுதிப் போட்டியில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோ்ந்த சக்தி பிரதா்ஸ் அணியும், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எதிா்நீச்சல் அணியும் விளையாடின. இதில், அந்தியூா் சக்தி பிரதா்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.