நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குற்றாலத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடக்கம்

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :31 மே 2026, 3:28 am IST

குற்றாலத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநில இறகுப்பந்துக் கழகம், தென்காசி மாவட்ட இறகுப்பந்து கழகம் ஆகியவை சாா்பில் குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பள்ளி, மத்தளம்பாறையில் உள்ள பவா் பிளே விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெறுகிறது.

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு இறகுப்பந்துக் கழக மாநிலப் பொதுச் செயலா் அருணாச்சலம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடக்கிவைத்தாா். ஹில்டன் பள்ளிக் குழுமத் தலைவா் ஆா்.ஜெ.வி. பெல், வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் வீரவேல்முருகன், ரஹீப் முகமது மூபின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஜூன் 4ஆம் தேதிவரை நடைபெறும் போட்டியில், 455 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். ஏற்பாடுகளை மாவட்ட இறகுப்பந்துக் கழகத் தலைவா் பிரதாப் ராஜா, செயலா் மதிவாணன் ஆகியோா் செய்துள்ளனா்.