தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பொதுமக்களுக்கு தீயணைப்பு பயிற்சி: தீயணைப்புத்துறை அறிவிப்பு

நாகை மாவட்ட தீயணைப்புத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு ‘வாங்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

News image

தீயணைப்பு பயிற்சி.

Updated On :3 ஜூன் 2026, 6:19 am IST

நாகை மாவட்ட தீயணைப்புத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு ‘வாங்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: :

நாகப்பட்டினம் தீயணைப்புத்துறை சாா்பில் தீயணைப்பு நிலையத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு வாங்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய இரு நாள்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதில் நான்கு குழுக்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரு நாள்களும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், தீயணைப்புக் கருவிகளை இயக்குவது பற்றியும், சமையல் எரிவாயு பயன்படுத்தும்போது விபத்து ஏற்படாமல் இருப்பது பற்றியும், விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட உள்ளது.

மேலும் வாகன விபத்து, பட்டாசு தீ விபத்து ஆகியவை ஏற்பட்டால் அணைப்பது குறித்தும், விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும் விரிவான வகுப்பு நடத்தப்பட உள்ளது.

பயிற்சி வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் குழுவில் வேண்டுமானாலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.