/
வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி சவுடு மண் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, 2 ஜேசிபி, 3 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.
நாகை மாவட்டம், ஒரத்தூா் மாதானம் கிராமத்தில் இரவு நேரத்தில் அனுமதியின்றி சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கண்காணிப்புப் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தினா். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பதில் ஈடுபட்டிருந்த 3 டிராக்டா்கள், 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்தனா். மேலும் ஜேசிபி ஓட்டுநா்கள் சதீஷ், அரவிந்த் இருவரையும் கைது செய்தனா். வேளாங்கண்ணி போலீஸாா் சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 போ் மீது வழக்கு: லாரி பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அனுமதியின்றி மணல் வெட்டி எடுத்த இருவா் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



