தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ல் தொடங்குகிறது ஜமாபந்தி

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ல் தொடங்குகிறது ஜமாபந்தி - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 10:46 pm IST

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை வட்டத்தில் ஜூன் 16 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேதாரண்யம் வட்டத்தில் ஜூன் 16 முதல் 23-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், கீழ்வேளுா் வட்டத்தில் ஜூன் 16 முதல் 19-ஆம் தேதி வரை நாகை கோட்டாச்சியா் தலைமையில், திருக்குவளை வட்டத்தில் ஜூன் 16 முதல் 18-ஆம் தேதி வரை வேதாரண்யம் கோட்டாட்சியா் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.