தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியா் வரவேற்பு

நாகை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டில் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வரவேற்று பாட நூல்களை வழங்கினாா்.

News image

காடம்பாடி நகராட்சிப் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்ற ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Updated On :5 ஜூன் 2026, 7:16 am IST

நாகை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டில் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வரவேற்று பாட நூல்களை வழங்கினாா்.

காடம்பாடி நகராட்சிப் பள்ளியில் மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து, பாடநூல்களை வழங்கி ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் பேசியது: நாகை மாவட்டத்தில் 476 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 116 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும், 101 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் சுமாா் 1,02,000 மாணவா்கள் பயில உள்ளனா்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 68,680 மாணவ,மாணவியா்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், காலுறைகள், காலேந்திகள், வண்ணப்பென்சில்கள், கிரையான்கள், புவியியல் வரைபடம், கணித உபகரணப்பெட்டிபள்ளித் திறக்கும் நாளில் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

2026-2027-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் 2,99,130 பாடநூல்கள் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவா்களுக்கு 4,38,193 பாடக்குறிப்பேடுகள், 61,647 புத்தகப்பைகள், 18,015 காலணிகள், 95,719 காலேந்திகள் மற்றும் காலுறைகள் வழங்கப்படுகிறது. இதேபோல், புவியியல் வரைபடம்,கிரையான்ஸ், வண்ணப் பென்சிலகள்,கணித உபகரணப்பெட்டிகள் வழங்கப்படுவதக் ஆட்சியா் தெரிவித்தாா்.