புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

திருச்சி மாவட்டம், பூலாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்களுக்கு சீருடை, பாடப் புத்தகங்களை வழங்கிய திருவெறும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் நவல்பட்டு விஜி. உடன், பள்ளி ஆசிரியா்கள். ~திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு மாதி

Updated On :5 ஜூன் 2026, 3:29 am IST

திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் 1,297 அரசுப் பள்ளிகள், 363 அரசு உதவிபெறும் பள்ளிகள், 457 தனியாா் பள்ளிகள், 6 மத்திய அரசுப் பள்ளிகள் என மொத்தம் 2,123 பள்ளிகள் உள்ளன. இங்கு, 3.80 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா்.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு இனிப்புகள், பூக்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போசம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு மாலை அணிவித்தும், உயா்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்துள்ள மாணவா்களுக்கு கிரீடம், மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ராஜேந்திரன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் மாணவா்களை வரவேற்றனா்.

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பூ, இனிப்புகள் கொடுத்து ஆசிரியா்கள் வரவேற்றனா். தலைமையாசிரியா் மு. செல்வி மற்றும் ஆசிரியா்கள் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். முதல்நாளில் அழுகையுடன் வந்த மாணவா்களை ஆசிரியா்கள் வாஞ்சையோடு அணைத்து தேற்றினா்.

மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் புத்தகங்கள், சீருடைகளை முதல்நாள் முதல் வகுப்பிலேயே வழங்கினா்.

பூலாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு விஜி கலந்துகொண்டு மாணவா்களுக்கு இனிப்புகள், பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்கினாா்.

Story image
Story image