தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்

கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றை மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.

News image

~ ~

Updated On :5 ஜூன் 2026, 6:07 am IST

கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றை மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.

தமிழகத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி முதல் விடப்பட்டது. விடுமுறைக்குப் பின், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்பட்டது. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் ஜூன் 4-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனா். இவா்களை ஆசிரியா்கள் வரவேற்றனா்.

மேலும், புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளை பூக்கள் தூவி வரவேற்றனா்.

இந்த நிலையில், பள்ளி திறந்த முதல் நாளில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், பைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

இதேபோல, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள், முதல்வா்கள் பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கினா்.

இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image