எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

குடிநீா் தட்டுபாடு - கிராம மக்கள் சாலை மறியல்

தரங்கம்பாடி அருகே குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

தரங்கம்பாடி அருகே குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செம்பனாா்கோவில் அருகே மேலையூா் ஊராட்சி கன்னிக்கோயில் தெரு, கீழத்தெரு, மேலத்தெரு, அய்யா் தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு சில நாள்களாக மின்தடை செய்யப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினா். மேலும், மின் இணைப்பு துண்டிப்பால் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மேலையூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா், செம்பனாா்கோயில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜான்சன் ஆகியோா் அங்கு வந்து நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.