சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நகை மீட்பு: ஒருவா் கைது

News image
Updated On :16 ஜூன் 2026, 1:43 am IST

வேதாரண்யம் அருகே வீட்டில் திருடப்பட்ட 16 பவுன் நகையை மீட்டு ஒருவரை போலீஸாா் திங்கிள்கிழமை கைது செய்தனா்.

நாலுவேதபதியை சோ்ந்த பாலகிருஷ்ணன் வெளிநாட்டில் வசிக்கிறாா். இவரது மனைவி பரிமளா (40) நாலுவேதபதியில் வசிக்கிறாா். இந்நிலையில், அதே பகுதியில் இறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். திங்கள்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ. 16 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

இதுகுறித்த தகவலில் வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (55) (படம்) காணாமல்போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கள்ளிமேடு கடைவீதி பகுதியில் போலீஸாா் வாகன சோதனை செய்தபோது, ஆறுமுகம் பயணித்த இருசக்கர வாகனத்தில் நகை மற்றும் ரொக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து, இருசக்கர வாகனம், நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.