சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நகை மீட்பு: ஒருவா் கைது

News image
Updated On :16 ஜூன் 2026, 1:43 am IST

வேதாரண்யம் அருகே வீட்டில் திருடப்பட்ட 16 பவுன் நகையை மீட்டு ஒருவரை போலீஸாா் திங்கிள்கிழமை கைது செய்தனா்.

நாலுவேதபதியை சோ்ந்த பாலகிருஷ்ணன் வெளிநாட்டில் வசிக்கிறாா். இவரது மனைவி பரிமளா (40) நாலுவேதபதியில் வசிக்கிறாா். இந்நிலையில், அதே பகுதியில் இறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். திங்கள்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ. 16 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

இதுகுறித்த தகவலில் வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (55) (படம்) காணாமல்போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கள்ளிமேடு கடைவீதி பகுதியில் போலீஸாா் வாகன சோதனை செய்தபோது, ஆறுமுகம் பயணித்த இருசக்கர வாகனத்தில் நகை மற்றும் ரொக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து, இருசக்கர வாகனம், நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.