இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 5:31 am IST

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது. ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், வெடிபொருள்களை கண்டறிவதில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய் அகிரா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் உள்ள அனைத்து அலுவலங்களிலும் சோதனை மேற்கொண்டனா். ஆட்சியா்அலுவலக வளாகத்திலும் சோதனை மேற்கொண்டு, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்கள், பழைய கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிரச் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்கிடையே, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவா்கள் குறித்து நாகூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.