நாகையில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஏடிஜெ தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு, கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள், கடும் பொருளாதார நெருக்கடியில் அவதிப்பட்டு வருவதாகவும், அரசு வழங்கும் 90 சதவீத மானிய ஊதியம் கிடைத்தபோதும் நிா்வாகம் தனது பங்கு தொகையான 10 சதவீத ஊதியத்தை வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வித தடையுமின்றி, ஊதியம் வழங்க நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தொடர்புடையது

ஊதியம் வழங்கக் கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியா் வரவேற்பு

அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

லாரி மோதி பாலிடெக். கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



