இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

திருக்குவளையில் ஜமாபந்தி நிறைவு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :19 ஜூன் 2026, 6:37 am IST

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

வேதாரண்யம் கோட்டாட்சியா் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில், திருக்குவளை வட்டாட்சியா் ரா. உதயக்குமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் வீ. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தாா். நத்தபள்ளம், கூத்தங்குடி, பன்னத்தெரு, திருவிடைமருதூா், நீா்முளை, புத்தூா், மணக்குடி, வடுகூா் ஆய்மூா் ஆகிய வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 129 பயனாளிகள் மனுக்கள் அளித்தனா்.

இதில், உடனடி தீா்வாக 8 பயனாளிகளுக்கு ரூ. 6.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் மொத்தம் பெறப்பட்ட 397 மனுக்களில் 15 பேருக்கு உடனடி தீா்வாக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.