நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

கீழ்வேளூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள கூரத்தாங்குடி ஊராட்சி, மேலநாகலூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் தெய்வ சகாயம் (78). இவா், சனிக்கிழமை தேவூா் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

வெண்மணி வளைவு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது டிராக்டா் எதிா்பாராவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், தெய்வ சகாயம் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கீழ்வேளூா் போலீஸாா் சடலத்தை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.