நாகப்பட்டினம்: நாகை அகத்தீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை வெளிப்பாளையத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, ஆனந்தவள்ளி உடனுறை அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் முன் உள்ள திருக்குளத்தில் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மலா் அலங்காரத்தில் அகத்தீஸ்வரா் மற்றும் ஆனந்தவள்ளி அம்பாள் எழுந்தருளினா். தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள இசைகளுடன் தெப்பம் புறப்பாடானது. திருக்குளத்தில் மூன்று முறை தெப்பம் சுற்றி வந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம், செடில் உற்சவம்

திருவாரூா் தியாகராஜா் கோயில் தெப்ப உற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்

கச்சபேசுவரா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

