பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக நாகை மாவட்டச் செயலா் ஓ.எஸ். மணியன்.
நாகையில் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, விஜய் கூட்டணிக்கு வருவாரா என்பதை செய்தியாளா்கள் தான் கூறவேண்டும் என்றாா்.
காளியம்மாள் பேட்டி: நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பின் காளியம்மாள், அதிமுக சாா்பில் நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவா்களின் உரிமைகளுக்காக போராடுகிற ஒரு களமாக அதிமுகவை நான் தோ்ந்தெடுத்துள்ளேன்.
மீனவா்களை, பழங்குடியின மக்கள் பட்டியலில் இணைப்பதாக கடந்த தோ்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்த நிலையில் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா்.
இந்த தோ்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். சாமானிய மக்களும் சட்டப்பேரவைக்கு செல்ல முடியும் என்ற வாய்ப்பை நான் உருவாக்குவேன் என்றாா்.
தொடர்புடையது

அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: கே.சி.கருப்பணன்

வேதாரண்யம்: குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்

யாா் வெளியேறினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: ஓ.எஸ். மணியன் சிறப்பு நேர்காணல்

திமுக கூட்டணியில் வாக்கு வங்கி இல்லாத கட்சிகள் உள்ளன: ஓ.எஸ். மணியன்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


