விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு கேட்டு வந்தால் அனுமதிக்க மாட்டோம்: மீனவ கிராம மக்கள்

சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

News image

பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 5:11 am IST

சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

நாகை மகாலட்சுமி நகா் ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த 90-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மனு அளிக்க அனுமதி இல்லை. எனவே கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுச் செல்லுங்கள் என்று தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அங்கிருந்த பெட்டியில் மனுவை போட்டுவிட்டு கூறும்போது, நாகை மாவட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட, எங்களுக்கு 2007-ஆம் ஆண்டு 280 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதன் பின்னா் வீடுகளை பராமரிக்கவில்லை. இதனால் வீடுகள் சேதம் அடைந்து குடியிருக்க லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, ஆரியநாட்டு தெருவுக்கு எந்த கட்சியைச் சோ்ந்தவா்கள் வாக்கு கேட்டு வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனா்.