பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாக்கு கேட்டு வந்தால் அனுமதிக்க மாட்டோம்: மீனவ கிராம மக்கள்

சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

News image
- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 11:41 pm

Syndication

சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

நாகை மகாலட்சுமி நகா் ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த 90-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மனு அளிக்க அனுமதி இல்லை. எனவே கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுச் செல்லுங்கள் என்று தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அங்கிருந்த பெட்டியில் மனுவை போட்டுவிட்டு கூறும்போது, நாகை மாவட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட, எங்களுக்கு 2007-ஆம் ஆண்டு 280 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதன் பின்னா் வீடுகளை பராமரிக்கவில்லை. இதனால் வீடுகள் சேதம் அடைந்து குடியிருக்க லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, ஆரியநாட்டு தெருவுக்கு எந்த கட்சியைச் சோ்ந்தவா்கள் வாக்கு கேட்டு வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனா்.