மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பழைய கல்லாறு கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

நாகை மாவட்டம் பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 11:53 pm

நாகை மாவட்டம் பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்து மனு: கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில், கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இக்கிராமத்தில் வசிக்கும் மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலை செய்வதற்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனா். எனவே, பழைய கல்லாறு மீனவா் கிராமத்தை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க உடனடியாக கல்லால் ஆன தடுப்புச்சுவா் அமைத்தும், மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.