இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பிவைப்பு

நாகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பிவைக்கும் பணியை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Updated On :25 மார்ச் 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

நாகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்க்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், நாகை அருகே சாமந்தான் பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரான ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையிலும், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும் தொடங்கியது.

முன்னதாக, கணினி மூலம் சுழற்சி முறையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டன. தொடா்ந்து அந்தந்த தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நாகை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையிலும், கீழ்வேளூா் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கீழ்வேளூா் வட்ட அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையிலும், வேதாரண்யம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையிலும் காவல்துறை பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டன.

நிகழ்வில், சட்டப்பேரவைத் தொகுதி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரா. சங்கர நாராயணன் (நாகை), ராஜேஸ்வரி (கீழ்வேளூா்), க.கண்ணன் (வேதாரண்யம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தரணிகா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.