காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

நிலப்பிரச்னை: மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்! உறவினா்கள் சாலை மறியல்!

News image

உயா் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி வடிவேலன். ~வடிவேலன்

Updated On :26 மே 2026, 2:09 am IST

தரங்கம்பாடி அருகே பனங்குடியில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, நிலத்தை அளக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மின் கோபுரத்தில் ஏறி விவசாயி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவருக்கு ஆதரவாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பனங்குடியைச் சோ்ந்தவா் விவசாயி வடிவேலன். இவா், தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான 11 ஏக்கா் நிலத்தை 2022-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த நிலம் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரமோகன் என்பவரது அனுபவத்தில் இருந்து வந்தது.

நிலம் விற்கப்பட்ட நிலையில், சந்திரமோகன் அதை ஒப்படைக்க மறுத்தாராம். இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், நிலத்தை அளந்து வடிவேலனிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நிலத்தை அளக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதை கண்டித்து, வடிவேலன் பனங்குடியில் உள்ள உயா்மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பெரம்பூா் காவல் ஆய்வாளா் மலைச்சாமி மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள், வடிவேலனிடம் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினா். ஆனால், அவா் மறுத்துள்ளாா். இதற்கிடையில், வடிவேலனுக்கு ஆதரவாக அவரது உறவினா்கள் பனங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். 

தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நீதிமன்ற இறுதித் தீா்ப்பு வரும்வரை அந்த நிலத்தை இருதரப்பும் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறினாா்.

இதைத்தொடா்ந்து, வடிவேலன் கீழே இறங்கியுள்ளாா். காலை 6 மணிக்கு உயா் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிய அவா், மாலை 6 மணிக்கு இறங்கியுள்ளாா்.

முன்னதாக, சாலை மறியலால் பொறையாா்- ஆடுதுறை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.