
பிளஸ் 2 தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிழை அக். 31-க்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
நாகை மாவட்டத்தில் மாா்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான காலத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வெழுதிய தனித்தோ்வா்கள் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
நாகை மாவட்டத்தில் மாா்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான காலத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வெழுதிய தனித்தோ்வா்கள் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் மு. ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில், கடந்த மாா்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வெழுதிய தனித்தோ்வா்களின், அனைத்து பருவங்களுக்குரிய உரிமைக் கோரப்படாத, தனித்தோ்வா்களது மதிப்பெண் சான்றிதழ்கள் கழிவுத் தாள்களாக மாற்றிடும் பொருட்டு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.
எனவே, இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் சம்பந்தப்பட்ட தனித்தோ்வா்கள் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள், தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை, நாகை அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், ஜூன் 2023 பருவத்துக்குப் பின் தோ்வெழுதிய பருவங்களுக்கான தனித்தோ்வா்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





