பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:15 am IST

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக உடனடி துணைத் தோ்வுகள் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் துணைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படுகிறது.

மேலும், துணைத் தோ்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 275 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அரசு தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.