சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

காரைக்காலில் முஸ்லிம் மாணவர்களுக்கென 15 நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.

காரைக்காலில் முஸ்லிம் மாணவர்களுக்கென 15 நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.

Updated On :13 மே 2013, 1:29 am IST

காரைக்காலில் முஸ்லிம் மாணவர்களுக்கென 15 நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஆண்டின் கோடை விடுமுறை காலத்தில் முஸ்லிம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, ஆங்கில பேச்சுத் திறன் மற்றும் கணினி அறிவை மேம்படுத்தும் பயிற்சி 15 நாள் நடத்தப்படுகிறது. நிகழாண்டு காரைக்கால் மாவட்டத்தில் 300 பேர் தேர்வு செய்யப்பட்டு 7 மையங்களில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  இதன் நிறைவு நிகழ்ச்சி அந்தந்த மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாம் நிறைவு நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வித் திட்ட துணை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஞானப்பிரகாசம், மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற துணை முதல்வர் ஜி. நடராஜன், ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் வி. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.