காரைக்காலில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தியை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
அதன்படி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பான சமஸ்கார் பாரதி சார்பில் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த நாடகம் சனிக்கிழமை மாலை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஆடிட்டர் பி. கணபதி சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
நாடகக் குழுவில் 22 பேர் பல்வேறு பாத்திரங்களில் நடித்தனர். நாடகம் சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவையைச் சேர்ந்த தேவநாராயணன், துரைகணேசன், திருநாவுக்கரசு, புதுவை மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய யு-18 ஹாக்கி அணிகள் ஜப்பான் பயணம்

இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மை, வளமை: பிரதமா் மோடி உறுதி
கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


