2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் கோயில்களின் இரவு நேர காவல் பணிக்கு, முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:05 am

DIN

திருவாரூர் மாவட்டத்தில் கோயில்களின் இரவு நேர காவல் பணிக்கு, முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு 50 காலியிடங்கள் முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கு 62 வயதுக்கு உள்பட்டவராகவும், நல்ல உடல் தகுதியோடும் உள்ள முன்னாள்  படைவீரர்கள் தங்களின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366-220210 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ பயன்பெறலாம் என  அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.