தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சசிகலா இன்று (மார்ச் 10) சந்தித்தார்.
இதில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இருவரும் சேர்ந்து திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அமைப்பது குறித்துப் பேசியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சசிகலா இன்று (மார்ச் 10) சென்று அவரை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக மிகப்பெரிய கூட்டணியாக உள்ள நிலையில், இந்த இரு கட்சிகளும் இல்லாத கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் பேசியதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்த சசிகலா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதிதாக கட்சித் தொடங்கினார்.
அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு என மூன்று நிறங்களுடன் கொடியை அறிமுகம் செய்தார். எனினும் கட்சியின் பெயரை பின்னர் அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.
இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்காத நிலையில், ராமதாஸை இன்று சசிகலா சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
An alliance without DMK and AIADMK Sasikala meets Ramadoss
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தருமபுரியின் 5 தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக?

ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி

ராமதாஸ் - சசிகலா கூட்டணி? இன்று சந்திப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


