/

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:00 am

DIN

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் உயிரிழந்தும் வருகின்றனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் வடிவழகன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நாகை நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் இடிமுரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.