வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், உத்ஸவர் குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.