கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

குரூப் சி பணி: முன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு...

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க வரைமுறைகள் வெளியாகியுள்ளன.

Updated On :29 மார்ச் 2018, 4:09 am

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க வரைமுறைகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 10-ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன், ராணுவப் பணியில் 15 ஆண்டுகள் முடித்து, ஆர்மி ஸ்பெஷல் சர்டிபிகேட் அல்லது கடற்படையிலோ, விமானப் படையிலோ கரஸ்பாண்டிங் சான்றிதழ் பெற்ற முன்னாள் படைவீரர்கள், பட்டப்படிப்பு தகுதிக்கு நிகரான ரிசர்வ்டு காலியிட குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள் என தமிழக அரசால் ஜன.23-இல் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், இத்தகைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவாரூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04366-220210 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.