சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில்

Updated On :8 அக்டோபர் 2018, 7:54 am IST

தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை அமலாக்க வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், அமைப்பின் திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், சிஐடியு தலைவர்கள் ஜி.பழனிவேல்,  எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.