கூத்தனூர் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஹயகிரிவ ஸ்ரீவித்யா பூஜை நடைபெற்றது.
நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூரில் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. மாணவ - மாணவியர் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு பெற வேண்டியும் இக்கோயிலில்,1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீ சரஸ்வதி அம்மனை வேண்டி ஸ்ரீஹயகிரிவ ஸ்ரீ வித்யா பூஜை நடைபெற்றது.
இப்பூஜையில் மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரும், கல்லூரி மாணவ, மாணவியரும் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட்டனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இப்பூஜைக்கான ஏற்பாடுகளை சாய் பந்துகள் மற்றும் பூந்தோட்டம் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
