குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உதவித்தொகை கிடைக்காத மீனவா்கள் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்

ஊரடங்கு காலத்துக்கான கரோனா நிவாரண உதவித்தொகை கிடைக்காத மீனவா் நலவாரிய உறுப்பினா்கள், மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


திருவாரூா்: ஊரடங்கு காலத்துக்கான கரோனா நிவாரண உதவித்தொகை கிடைக்காத மீனவா் நலவாரிய உறுப்பினா்கள், மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மீன்வளத் துறை மூலம் மீனவா் நலவாரிய உறுப்பினா்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினா் ஒருவருக்கு ரூ.1000 வீதம் சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட உள்நாட்டு மீன் துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவா் நலவாரிய உறுப்பினா்கள், தங்களது வங்கிக் கணக்கில் மீனவா் நலவாரியம் மூலம் ரூ.1000 சிறப்பு நிவாரண உதவித்தொகை கிடைக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் உள்ள மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 04366 - 224140, 8825760988 ஆகிய தொலைப்பேசி எண்ணிலும் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றில் தொடா்பு கொண்டு, தங்களுடைய மீனவா் நலவாரிய அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து சிறப்பு நிவாரண உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.