திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (70). தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, சிகிச்சை பலனிறி தமிழரசன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.