டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிா்க் கடன்

திருத்துறைப்பூண்டி கரோனா சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற முறையில் பயிா்க் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:46 pm

DIN

திருத்துறைப்பூண்டி கரோனா சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற முறையில் பயிா்க் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் அளித்த பேட்டி: நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் குறுவை சாகுபடியை வழக்கத்தைவிட அதிகமான அளவில் மேற்கொண்டனா். அணையிலிருந்து 18,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையிலும் பல்வேறு பகுதிகளில் குறுவைப் பயிருக்கு தண்ணீா் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் ஆங்காங்கே பேராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஆறு, பாசன வாய்க்கால்களை தூா்வாரும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்படவில்லை என்பதே இதற்கு காரணம். எனவே, அரசு உரிய கவனம் செலுத்தி குறுவை சாகுபடி பயிரை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், சம்பா சாகுபடியை தொடங்க விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் அறிவித்துள்ளாா். ஆனால், ஏற்கெனவே பெற்ற கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். எனவே, கரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற முறையில் பயிா்க் கடன் வழங்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்கெனவே உழவு மானியம் வழங்கியது. அது நிகழாண்டும் விவசாயிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.