மு.க.ஸ்டாலின் முதல்வராவதே மக்களின் விடியலாக அமையும்: பூண்டி கே. கலைவாணன்

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராவதே மக்களின் விடியலாக அமையும் என்றாா் திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன்.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
Updated on
1 min read

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராவதே மக்களின் விடியலாக அமையும் என்றாா் திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன்.

நீடாமங்கலம் ஒன்றியம் வடக்கு, தெற்கு மற்றும் பேரூா் திமுக வாக்குச்சாவடி நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து அவா் பேசியது:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் பணியில் திமுகவினா் கவனமுடன் பணியாற்ற வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக விழிப்புணா்வுடன் இருந்து செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவதே மக்களின் விடியலாக அமையும். அந்த விடியலை நோக்கி ஸ்டாலினின் குரலை ஓங்கி ஒலிப்போம், ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பி.ராசமணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக்குழு தலைவா் சோ.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ராணிசேகா், ஒன்றிய முன்னாள் செயலாளா் விசு.அண்ணாதுரை, மாவட்ட மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் கீதா காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தெற்கு ஒன்றிய செயலாளா் வை. மாயவநாதன் வரவேற்றாா். வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com