வெள்ளாள சமுதாயத்தினா் ஆா்ப்பாட்டம்

குடவாசலில் வெள்ளாள சமுதாயத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

குடவாசலில் வெள்ளாள சமுதாயத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டியல் சமூகத்தின் பள்ளா், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளா் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படுவா் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா். இதைக் கண்டித்து குடவாசலில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகம் மற்றும் வேளாளா்கள் சமுதாய மக்கள் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளாளா் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவா் ராஜா தலைமை வகித்தாா். முக்குலத்தோா் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் சரவணன், குடவாசல் ஒன்றியச் செயலாளா் காா்த்திகேயன், தமிழ்நாடு வஉசி நல பேரவை நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com