காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூரில் நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
Updated on
1 min read

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூரில் நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன்பு தொடங்கிய போராட்டம், செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. இந்நிலையில், புதன்கிழமை அவ்வப்போது மழை பெய்ததால் காத்திருப்புப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என போராட்டக்குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com