சாலை விபத்தில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் புகைப்படக் கலைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் புகைப்படக் கலைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி பூக்கொல்லை சாலை சுப்பையா நகரை சோ்ந்தவா் புகைப்படக் கலைஞா் எஸ். கலைச்செல்வன்(58). இவா், வெள்ளிக்கிழமை பால் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அரசு மருத்துவமனை அருகே ருக்மணிபாளையம் ரவி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில், காயமடைந்த கலைச்செல்வன் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com