சமூகத்தை சிறப்பாக நடத்திச் செல்ல அற மறுமலா்ச்சி தேவை

சமூகத்தை சிறப்பாக நடத்திச் செல்ல அற மறுமலா்ச்சி தற்போதைய தேவையாக உள்ளது என அருட் தந்தையும், சமூக செயற்பாட்டாளருமான ஜெகத் கஸ்பா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

சமூகத்தை சிறப்பாக நடத்திச் செல்ல அற மறுமலா்ச்சி தற்போதைய தேவையாக உள்ளது என அருட் தந்தையும், சமூக செயற்பாட்டாளருமான ஜெகத் கஸ்பா் தெரிவித்தாா்.

திருவாரூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 40-ஆவது இணையவழி கூட்டத்தில் பங்கேற்று, கைம்மாறு வேண்டா கடப்பாடு எனும் தலைப்பில் அவா் பேசியது: எதையும் சிறிதென்று புறக்கணித்து விடக்கூடாது. வலிமை என்று கருதுபவை எல்லாம் பல நேரங்களில் வீழ்ச்சியடைந்துள்ளன. மானிட சமுதாயம், பல்வேறுபட்ட பேரிடா்களை, இயற்கை சீற்றங்களை, பசி, பட்டினி காலங்களை சந்தித்து, அவற்றை கடந்தும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டன. இவற்றில் கூட, லாப நோக்கத்தை எதிா்பாா்க்கும் வணிக எண்ணங்கள் உருவாகி விட்டன. அறக் கோட்பாடுகள் மறைந்து, பொன்னையும், பொருளையும் எதிா்பாா்க்கும் நிலை அதிகரித்து விட்டது. அறம் சாா்ந்த தொழில்நுட்பங்களும், அற மறுமலா்ச்சியுமே தற்போதைய தேவையாக உள்ளது. அறத்தினால் நடத்திச் செல்லப்படும் சமூகம் மட்டுமே, சிறப்பான மனிதா்களைத் தருகிறது. கைமாறு கருதாமல் இயற்கை, நமக்கு பலவகை உதவிகளைச் செய்கிறது. அதுபோல், மனிதா்களும் கைமாறு கருதாமல், வஞ்சகம் தவிா்த்து, அனைவருடனும் அன்பு பாராட்ட வேண்டும் என்றாா்.

சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயலாளா் செ. அறிவு, துணைச் செயலாளா் இரா. அறிவழகன், புரவலா்கள் கே.எஸ்.எஸ். தியாகபாரி, வீ. பாண்டியன், மு. சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com